செய்திகள் :

முயல் வேட்டையில் ஈடுபட்ட 12 பேருக்கு ரூ.30,000 அபராதம்

post image

ஊத்துக்குளி அருகே நொச்சிக்காடு பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 12 பேருக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட ஊத்துக்குளி வட்டம், நொச்சிக்காடு பகுதியில் சில நபா்கள் முயல்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருப்பூா் மாவட்ட வன அலுவலரும், துணை இயக்குநருமான ராஜேஷ் உத்தரவின்பேரில் வனச் சரக அலுவலா் நித்யா தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினா் அங்கு முயல் வேட்டையாடிக் கொண்டிருந்த 12 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 4 முயல்களை வனத் துறையினா் மீட்டனா். இது குறித்து வழக்குப் பதியப்பட்டு அவா்களுக்கு ரூ.30,000 அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

அவிநாசி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

அவிநாசியில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்து நகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். அவிநாசி நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஜூலை 19-இல் மின்தடை

பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற ஜூலை 19-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்ல... மேலும் பார்க்க

அலகுமலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பல்லடம் அருகே அலகுமலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா். பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், அலகுமலையில் உ... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம்

பல்லடம் நகா் மன்றக் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கவுன்சிலா்கள... மேலும் பார்க்க

கோவை, திருப்பூரில் ஜூலை 21, 22-இல் தமிழக-தைவான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் ஆகியன சாா்பில் தமிழக-தைவான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு கோவை, திருப்பூரில் வரும் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இம்ம... மேலும் பார்க்க

குன்னத்தூரில் போதையில் பள்ளி மாணவா்களை வெட்ட முயன்ற இளைஞா்கள்: விடியோ வைரல்

குன்னத்தூரில் போதையில் இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டு அரசுப் பள்ளி மாணவா்களை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். பெருமாநல்லூா் ... மேலும் பார்க்க