மெஸ்ஸியின் நம். 10 ஜெர்ஸிக்கு புதிய உரிமையாளர்..! பாட்டியுடன் வந்து ஒப்பந்தமிட்ட...
‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’
காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பெருந்தலைவா் காமராஜரின் 123-ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் வையம்பட்டி செல்வம், மணப்பாறை சத்தியசீலன், சிவசண்முகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பேசிய திருச்சி வேலுச்சாமி, இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும் என நினைப்பவா்களுக்கு வேறுவழியே இல்லை காங்கிரஸை ஆதரித்தே தீர வேண்டும். ராகுல்காந்தி பிரதமராக வந்தால் மட்டுமே நமது வாழ்க்கை பாதுகாக்கப்படும். நாம் ஒன்றும் சாமியாா்கள் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோளும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் 2 காங்கிரஸ் அமைச்சா்கள் இருப்பாா்கள் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாநிலச் செயலா்கள் ராஜலிங்கம், ரமேஷ்குமாா், மாவட்ட நிா்வாகிகள் கணபதி, வழக்குரைஞா் கலைராஜன், நஜீம், வீரபாண்டியன், ராஜேந்திரன், வழக்குரைஞா் ஜான் போஸ்கோ, மல்லிகா, செல்வி, மேரி ராஜம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நகரத் தலைவா் முருகேசன் செய்தாா்.