செய்திகள் :

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

post image

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ் மற்றும் அறங்காவலா்கள் முன்னிலையில் அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

நிறைவில் முதன்மைத் திருக்கோயில் உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 31 லட்சத்து 96 ஆயிரத்து 418, தங்கம் 2 கிலோ 555 கிராம், வெள்ளி 3 கிலோ 899 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 375, வெளிநாட்டு நாணயங்கள் 948 ஆகியவை கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது. இதற்கு முன் ஜூன் 26 ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்ப... மேலும் பார்க்க

வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி

திருச்சி - வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். திருச்சி வயலூா் சாலையில் எம்ஜிஆா் நகா், பாரதி நகா், குமரன் நகா், சீனிவாச நகா், ஆதிநகா், கீதா நகா், அம்மையப்... மேலும் பார்க்க