செய்திகள் :

நீலகிரி பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை: 'கடைசி மூச்சு வரை சிறைத் தண்டனை' - நீதிமன்றம் தீர்ப்பு

post image

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி ஒருவர், நீலகிரியில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்திருக்கிறார்.

கடந்த 2020-ம் பொங்கல் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குச் சென்ற அந்த மாணவி, 28- 01- 2020 அன்று பள்ளிக்குத் திரும்ப பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார்.

Child Abuse
Child Abuse

அப்போது அந்த வழியாக காரில் சென்ற இளைஞர் ஒருவர், ஏதோ சொல்லி மாணவியை காரில் ஏற்றியிருக்கிறார். மாணவி நிறுத்தச் சொன்ன இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகத்தில் இயக்கிச் சென்று காரமடை பகுதிக்குக் கடத்திச் சென்றிருக்கிறார்.

அங்குள்ள தனியார் வொர்க் ஷாப் ஒன்றிற்கு மாணவியை மிரட்டியும் கட்டாயப்படுத்தியும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

மறுநாள் காலை மாணவியை அழைத்து வந்து நீலகிரி மாவட்ட எல்லையில் இறக்கிவிட்டுத் தப்பி ஓடியிருக்கிறார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

முரளி
முரளி

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான முரளி என்பவர்தான் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், அவர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடைசி மூச்சு வரை வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என அதிரடித் தீர்ப்பு விதித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், முரளிக்கு அபராதம் விதித்ததுடன் தமிழக அரசிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை இழப்பீடாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

போலி பேஸ்புக் கணக்குகள்; பெண்ணுக்கு பகிரப்பட்ட ஆபாச புகைப்படங்கள் - ஈரோடு இளைஞர் சிக்கிய பின்னணி!

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் மாட்டுப் பண்ணை உரிமையாளர் ஒருவர், கடந்த மே மாதம் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், பேஸ்புக்கில் தனது மனைவியிடம் ஒரு நபர் ஆபாசம... மேலும் பார்க்க

திருத்தங்கல்: மது போதையில் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்; தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள், மதிய உணவு இடைவேளைக்குப் பின் மது அருந்திவிட்... மேலும் பார்க்க

`நகையை மீட்டு, மறு அடகு' - வங்கி ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி.. சினிமாவை மிஞ்சிய கிரைம் சம்பவம்

கேரள மாநிலம் கோழிக்கோடு பந்தீரங்காவு குன்னத்து பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபின் லால். இவரது மனைவி கிருஷ்ண லேகா. கடந்த மாதம் 11-ம் தேதி பந்தீரங்காவில் உள்ள ஒரு தனியார் வங்கிக்குச் சென்ற ஷிபின்லால், 'ஒ... மேலும் பார்க்க

நீலகிரி: சிறுத்தைகளைக் காவு வாங்கும் சுருக்கு கம்பிகள்; என்ன செய்யப்போகிறது வனத்துறை?

வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனத்திற்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளைப்‌ போல் ஊடுருவி வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் வேட்... மேலும் பார்க்க

Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்ன விதிகள்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா(34) என்பவர் தனது பார்ட்னரை கொலைச் செய்த வழக்கில் ஏமன் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. 2008-ல் ஏமன் ந... மேலும் பார்க்க

மாணவியை பாலியல் வதை செய்த பேராசிரியர்கள்; 3 பேர் கைது... கல்வி நிலையங்களில் தொடரும் அவலங்கள்!

கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பரால், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.பாதிக்கப்பட்ட மாண... மேலும் பார்க்க