செய்திகள் :

வேலைச் சுமையா? ஸ்டோக்ஸ் முன்மாதிரி, ஏமாற்றும் பும்ரா..! விமர்சித்த முன்னாள் வீரர்!

post image

லண்டனில் நடைபெற்ற டெஸ்ட்டில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்திலும் பந்துவீச, பும்ரா ஏன் வேலைச் சுமை என பல போட்டிகளில் இருந்து ஒதுங்குகிறார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் கடைசி நாளில் இந்தியாவுக்கு 135 ரன்கள் தேவையான நிலையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்திலும் சிறப்பாக பந்துவீசி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தியாவின் பும்ரா வேலைச் சுமை என கடந்த டெஸ்ட்டில் விளையாடவில்லை. இது குறித்து இர்ஃபான் பதான் கூறியதாவது:

ஏமாற்றம் அளிக்கும் பும்ரா

ஐந்தாம் நாளில் காலையில் பென் ஸ்டோக்ஸ் 9.2 ஓவர்கள் வீசுகிறார்.

என்ன மாதிரியான ஒரு வீரர் ஸ்டோக்ஸ். அவர் பந்துவீசுகிறார், பேட்டிங் செய்கிறார், ரிஷப் பந்த் விக்கெட்டை ரன் அவுட்டில் எடுத்தார். அவர் இந்த வேலைச் சுமைக் குறித்து பேசுவதில்லை.

இந்தியாவில், அப்படி இல்லை. பும்ரா 5 ஓவர்கள் வீசிவிட்டால் பிறகு ஜோ ரூட் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

பிறகு, எப்படி இரண்டாம் இன்னிங்ஸில் போட்டியைக் கட்டுப்படுத்துவது? இது மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியது.

பும்ராவுக்கு என்ன வேலைச் சுமை இருக்கிறது?

எட்ஜ்பாஸ்டனில் பும்ரா விளையாடாமல் அவரது வேலைச் சுமையைக் குறைத்தார்கள்.

கிரிக்கெட் விளையாட வந்துவிட்டால் வேலைச் சுமை கிடையாது. எப்படியானாலும் வெற்றிப்பெற வேண்டும். இந்திய அணி இதைச் சரியாக அணுக வேண்டும்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடும் ஆர்ச்சர் நிற்காமல் பந்துவீசுகிறார். காலையில் 6 ஓவர் ஸ்பெல் வீசுகிறார்.

பென் ஸ்டோக்ஸ் 9 ஓவர்கள் வீசும்போது இந்தியர்கள் ஏன் பின் தங்குகிறார்கள்? என்றார்.

With Lord's Test on the line, England's injury-prone captain Ben Stokes threw workload management out of the window to bowl two marathon spells on day five, raising the benchmark not just for his own men but also for the Indian fast bowlers going into the final two games.

பிங்க் பந்து நிபுணர் மிட்செல் ஸ்டார்க்! இமாலய சாதனை!

பிங்க் பந்து போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இமாலய இலக்கை அடைந்துள்ளார். பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பகலிரவு ஆட்டத... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த லியாம் டாசன்!

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் விளையாட லியாம் டாசன் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து அணியில் கடந்த 2016-இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானவர் லியாம் டாசன். தற்போது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும... மேலும் பார்க்க

கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் இந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் 3-ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்... மேலும் பார்க்க

தனியாகப் போராடும் தளபதி..! ஜடேஜாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!

இங்கிலாந்திடம் குறைந்த ரன்களில் இந்தியா தோற்றாலும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவின் போராட்ட குணத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அண... மேலும் பார்க்க

பகலிரவு டெஸ்ட்டில் வரலாறு படைத்த ஸ்காட் போலண்ட்!

ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் பகலிரவு டெஸ்ட்டில் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆஸ்திரேலியாவின் எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

சச்சின் ஓய்வுக்குப் பிறகு 150+ சேஸிங்கில் சொதப்பும் இந்திய அணி!

சச்சின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி சேஸிங்கில் மோசமான சாதனைகளை நிகழ்த்தி வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி ... மேலும் பார்க்க