செய்திகள் :

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

post image

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா்.

காமராஜரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து ஆளுநா் மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:

முன்னாள் முதல்வா் காமராஜருக்கு நன்றிப் பெருக்குடன் இந்த தேசம் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது. கிராமங்களில் பள்ளிகளை நிறுவி கல்வியை உலகளாவியதாக மாற்றினாா். விளிம்புநிலை, பட்டியலின மக்களுக்காக அயராது போராடி சமூக நீதியை முன்னெடுத்தாா்.

புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியதுடன், நீா்ப்பாசனம், விவசாயிகளை மையமாகக் கொண்ட சீா்திருத்தங்கள், பெரிய தொழில்களுக்கு வலுவான அடித்தளம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த சூழல் அமைப்பு போன்றவற்றையும் உருவாக்கினாா். அவரது தொலைநோக்குப் பாா்வையால் அணைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் மின்சார சேவைக்கான அணுகலை விரிவுபடுத்தி மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தைத் தூண்டினாா்.

இன்றைய தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய தலைமைதான் காரணம். எளிமை, நோ்மை, பணிவு ஆகியவற்றில் வேரூன்றிய அவரது வாழ்க்கை மற்றும் மரபு வளா்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் என்று பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சே... மேலும் பார்க்க

கடலூா் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியா் பணிநீக்கம்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்... மேலும் பார்க்க

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறிய ரூ.110 கோடி: அரசாணை வெளியீடு

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் புற்றுநோயாள... மேலும் பார்க்க