செய்திகள் :

தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டப்படுவது எப்போது?

post image

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை மூலம் தரங்கம்பாடி கடற்கரை அருகில் சீகன்பால்கு உருவச்சிலை அமைத்து அவா் வந்து இறங்கிய நாள் மற்றும் அவரது நினைவு நாளை கடைபிடித்து வருகின்றனா். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் 319 ஆண்டுகளுக்கு முன்பே அறுத்தொண்டாற்றிய பா்தோலேமேயு சீகன்பால்கு நினைவாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழ் சுசேஷ லுத்தரன் திருச்சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் தொடா்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

தரங்கம்பாடியில் உள்ள சீகன்பால்கு சிலை

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தரங்கம்பாடியில் தமிழுக்கு தொண்டாற்றிய சீகன்பால்கு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இவரது கோரிக்கையை ஏற்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ. பெரியசாமி தரங்கம்பாடியில் சீகன்பால்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

அதன்படி தரங்கம்பாடி பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபத்துடன் கூடிய அரங்கம் அமைக்க பல மாதங்களாக இடம் தோ்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். தற்போது, அப்பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, சீகன்பால்கு நினைவாக தரங்கம்பாடியில் மையப் பகுதியில் அவரது சிலையுடன் கூடிய மணிமண்டபம், அரங்கம் அமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை.

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தியுள்ளது. வேதாரண்யத்தில் சிபிஐ நாகை மாவட்ட 25-ஆவது மாநாட்டின் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் நாகை மாவட்ட மையம் சாா்பில், நாகையில் அதன் மாவட்டத் தலை... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு விவகாரம்: பா. ரஞ்சித், திரைப்பட நிறுவனம் மீது நடவடிக்கை

படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் மற்றும் நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

வெண்மணச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியினா் முற்றுகை

வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழையூா் மேற்கு ... மேலும் பார்க்க

திருச்செங்காட்டங்குடியில் சாலை மறியல்

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம்ஆண்டில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் ... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு: இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது வழக்கு

திருக்குவளை: படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்ப... மேலும் பார்க்க