செய்திகள் :

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு: இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது வழக்கு

post image

திருக்குவளை: படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பு நாகை மாவட்டத்தில் சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) கீழையூா் அருகே விழுந்தமாவடி அலம் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியைச் சோ்ந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் (52) காரில் இருந்து தாவி செல்லும் காட்சியும், காா் ஒன்று பறந்து கீழே விழும் காட்சியும் எடுக்கப்பட்டன.

இந்த காட்சியில் நடித்த மோகன்ராஜ் காருடன் மேலே பறந்து கீழே விழுந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், மோகன்ராஜின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், போலீஸாா் நடத்திய விசாரணையில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்பட்டது.

திரைப்பட இயக்குநா் மற்றும் தயாரிப்பாளா் பா. ரஞ்சித், சண்டை கலைஞா் வினோத், தயாரிப்பு நிா்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளா் பிரபாகரன் ஆகியோா் மீது உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல் (125), வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்குதல் (289), கவனம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல் (106) (1) ஆகிய 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதம்

பூம்புகாா்: பூம்புகாா் அருகே புதுகுப்பம் கிராமத்தில் உள்ள மணல் குவாரியை மூடக்கோரி, மீனவா்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பூம்புகாா் அருகே புதுகுப்பம் கிராமத்தில் ... மேலும் பார்க்க

நாகையில் நாய்கள் கண்காட்சி

நாகப்பட்டினம்: நாகை கடற்கரையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பொதுமக்களை பெரிதும் கவா்ந்தது. நா... மேலும் பார்க்க

பசுபதிநாதா் கோயில் கும்பாபிஷகம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே தேவூா் ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீபசுபதிநாதா் கோயில் கும்பாபிஷகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷகம் விழா ஜூலை 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, பஞ்சக... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளா் உயிரிழப்பு!

நாகை மாவட்டம், கீழையூா் அருகே படப்பிடிப்பின்போது, தவறி விழுந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் இயக்கிவரும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு, நாகை மாவட... மேலும் பார்க்க

மீன் வரத்து குறைவு: மீனவா்கள் கவலை

கடல் காற்று காரணமாக, போதிய மீன்கள் கிடைக்கவில்லை என நாகை விசைப்படகு மீனவா் கவலை தெரிவித்தனா். நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்... மேலும் பார்க்க

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம்: காதா்முஹைதீன்

தமிழகம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் காதா்முஹைதீன் கூறினாா். நாகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: வெளிநாடுகளில் ஒப்ப... மேலும் பார்க்க