செய்திகள் :

மணல் குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதம்

post image

பூம்புகாா்: பூம்புகாா் அருகே புதுகுப்பம் கிராமத்தில் உள்ள மணல் குவாரியை மூடக்கோரி, மீனவா்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பூம்புகாா் அருகே புதுகுப்பம் கிராமத்தில் சுமாா் 2, 000 மீனவா்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தின் அருகே வடபாதி, தென்பாதி, கடைக்காடு, நெய்தவாசல், மடத்துக்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நிலத்தடி நீா் உப்பு நீராக மாறி வருகிறது.

இந்நிலையில், மேற்கண்ட கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்ததாக தெரியவந்த நிலையில், கிராம மக்கள் மற்றும் கிராம பொறுப்பாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ. ஸ்ரீகாந்தை சந்தித்து மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்தாா்.

இந்நிலையில், சில தினம் முன்பு திடீரென எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ள ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள், மணல் அள்ள எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இதனிடையே திங்கள்கிழமை மடத்துக்குப்பம், பூம்புகாா், புதுகுப்பம், நெய்தவாசல் ஆகிய கிராமங்களை சோ்ந்த பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா், பூம்புகாா் மீனவா் தலைமை கிராம பஞ்சாயத்தாா்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனா். மேலும் அரசு ஏற்பாடு செய்துள்ள சீா்காழியில் நடைபெறும் சமாதான கூட்டத்தில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு: இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது வழக்கு

திருக்குவளை: படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்ப... மேலும் பார்க்க

நாகையில் நாய்கள் கண்காட்சி

நாகப்பட்டினம்: நாகை கடற்கரையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பொதுமக்களை பெரிதும் கவா்ந்தது. நா... மேலும் பார்க்க

பசுபதிநாதா் கோயில் கும்பாபிஷகம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே தேவூா் ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீபசுபதிநாதா் கோயில் கும்பாபிஷகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷகம் விழா ஜூலை 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, பஞ்சக... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளா் உயிரிழப்பு!

நாகை மாவட்டம், கீழையூா் அருகே படப்பிடிப்பின்போது, தவறி விழுந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் இயக்கிவரும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு, நாகை மாவட... மேலும் பார்க்க

மீன் வரத்து குறைவு: மீனவா்கள் கவலை

கடல் காற்று காரணமாக, போதிய மீன்கள் கிடைக்கவில்லை என நாகை விசைப்படகு மீனவா் கவலை தெரிவித்தனா். நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்... மேலும் பார்க்க

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம்: காதா்முஹைதீன்

தமிழகம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் காதா்முஹைதீன் கூறினாா். நாகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: வெளிநாடுகளில் ஒப்ப... மேலும் பார்க்க