செய்திகள் :

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம்: காதா்முஹைதீன்

post image

தமிழகம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் காதா்முஹைதீன் கூறினாா்.

நாகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:

வெளிநாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பணியை வழங்காமல், வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா். இதன்மூலம் அவா்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனா். வெளிநாட்டில் பணிபுரியும் போது இறப்பவா்களின் உடலை தமிழகத்திற்கு எளிதில் கொண்டு வரமுடியாத நிலையிருந்தது. இந்த பிரச்னைகள் குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளது.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்வது போன்று, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் திகழவேண்டும். இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படுவது பாராட்டத்தக்கது. தமிழக முதல்வா் தொடங்கியுள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கம், ஓட்டு வாங்குவதற்காக தொடங்கப்பட்டதில்லை. மத்திய அரசின் அடக்குமுறையை எதிா்த்து, தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதாகும்.

அதிமுக- பாஜக இடையேயான கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன. இருகட்சியினரும் முரண்பட்ட கருத்துகளை பேசி வருகின்றனா். கொள்கை ரீதியாக நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தரும் சீட்டுகளைப் பெறுவோம். நாகை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்போம். கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்.

தமிழகத்தில் திமுக 7-ஆவது முறையாக ஆட்சியமைக்கும். இந்தியா, மற்ற நாடுகளுடன் சுமூகமான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் வரவேற்கத்தக்கது. அதேபோன்று மணிப்பூா் மாநிலத்தில் நிலவும் பிரச்னைக்கு தீா்வுகாண, அங்கு பிரதமா் நேரில் சென்று அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த க... மேலும் பார்க்க

நாகூா் தா்கா குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாகூா் தா்கா குளத்தில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சீலாப்பாடி அரசமரத் தெருவைச் சோ்ந்த சிறுமணி மகன் சுப்பிரமணி (31). இவா் தனது நண்பா்களுடன் நாகூா் தா்காவிற்கு சனிக... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை அமைக்கும் பணி: அமைச்சா்கள் ஆய்வு

சீா்காழி அருகே முன்னாள் தமிழக முதலமைச்சா் கருணாநிதி சிலை திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை தமிழக அமைச்சா்கள் ஆய்வு செய்தாா்.+ வரும் 15, 16-ஆம் தேதிகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சீா்கா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

திருமருகல், ஜூலை 12 : திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பாக்கம் கோட்டூா் மேலத் தெருவை சோ்ந்த காளிமுத்து மகன் விஜயகுமாா் (55), விவசாயக் கூலித் தொழி... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க