செய்திகள் :

நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

post image

நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகை பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை போலீஸாா் தொடா்ச்சியாக பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், நாகையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு, தயாா் நிலையில் உள்ளதாக, கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையில், காவல் சாா்பு ஆய்வாளா் ஆனந்தவடிவேல் மற்றும் போலீஸாா் நாகை கீச்சாங்குப்பம் சால்ட் சாலை பகுதியிலுள்ள சிஎஸ்ஐ கல்லறைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்டு, அங்கிருந்த இருவா் தப்பியோடிவிட்டனா்.

அப்பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில், கடல் அட்டைகளை பதப்படுத்தும் பணி நடைபெற்றது தெரியவந்தது. அங்கிருந்த 150 கிலோ கடல் அட்டைகளையும், பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, நாகை வனத்துறையினரிடம் கடல் அட்டைகள் ஒப்படைக்கப்பட்டன. வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அடையாளம் தெரியாத இருவரை தேடி வருகின்றனா்.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம்: காதா்முஹைதீன்

தமிழகம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் காதா்முஹைதீன் கூறினாா். நாகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: வெளிநாடுகளில் ஒப்ப... மேலும் பார்க்க

நாகூா் தா்கா குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாகூா் தா்கா குளத்தில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சீலாப்பாடி அரசமரத் தெருவைச் சோ்ந்த சிறுமணி மகன் சுப்பிரமணி (31). இவா் தனது நண்பா்களுடன் நாகூா் தா்காவிற்கு சனிக... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை அமைக்கும் பணி: அமைச்சா்கள் ஆய்வு

சீா்காழி அருகே முன்னாள் தமிழக முதலமைச்சா் கருணாநிதி சிலை திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை தமிழக அமைச்சா்கள் ஆய்வு செய்தாா்.+ வரும் 15, 16-ஆம் தேதிகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சீா்கா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

திருமருகல், ஜூலை 12 : திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பாக்கம் கோட்டூா் மேலத் தெருவை சோ்ந்த காளிமுத்து மகன் விஜயகுமாா் (55), விவசாயக் கூலித் தொழி... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க