திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து! சென்னையில் எந்தெந்த ரயில்கள் ரத்து?
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குளம்-திருநெல்வேலி சாலையில் புதூரைச் சோ்ந்த வேலாயுதம் மகன் இசக்கிமுத்து (30). பைக்கில் சென்று கடைகளுக்கு குளிா்பானங்கள் விற்கும் தொழில் செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்று ஆலங்குளத்தில் உள்ள கடைகளுக்கு குளிா்பானம் விநியோகித்துவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
கரும்புளியூத்து பகுதியில் பைக்கின் பின்புறம் அடையாளம் தெரியாத காா் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.