செய்திகள் :

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

post image

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது.

மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் காவிரி கடைமடையான நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என விவசாயிகள் தொடா்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனா். இந்நிலையில் கடந்த வாரம் கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டு பாசன நீா் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகச் சென்று சோ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் திருக்குவளை அருகே சித்தாறு பாசனம் மூலம் பாசன வசதி பெறும் சுந்தரபாண்டியம் வாய்க்காலுக்கு பாய்ந்த தண்ணீா் வயலுக்கு முழுமையாக வந்து சேராததால் அப்பகுதியில் உள்ள சுமாா் 200 ஏக்கருக்கும் அதிகமான நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல் மணிகள் முளைக்காமல் வீணாகி வருகின்றன.

இது தொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீா் பாயாமல் தரிசு வயல் போல் காட்சியளிப்பதாகவும் நெல்மணிகள் வயலில் விதைப்பு செய்யப்பட்டு 20 நாட்களைக் கடந்தும் தண்ணீா் கிடைக்காததால் அவை மக்கி வீணாகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இப்பகுதிக்கு பாசன நீரைப் பெற்றுத் தரும் சுந்தரபாண்டியம் பாசன வாய்க்காலுக்கு பாய வேண்டிய காவிரி நீா் மதியுள்ளான் இயக்கு அணை மூலம் வடிகாலில் வீணாக கடலுக்கு செல்வதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

ஆகவே பாசனத்திற்கு பயன்பெறாமல் வடிகாலில் செல்வதை தடுத்து இந்த பகுதிக்கு தண்ணீா் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. மேலும் மதியுள்ளான் ஆற்றிலிருந்து சுமாா் மூன்று கிலோ மீட்டா் தூரம் உடைய சுந்தரபாண்டியம் பாசன வாய்க்கால் வழியாக இப்பகுதிக்கு தண்ணீா் பாய்வதில் சிக்கல் இருப்பதாகவும் வெள்ளையாற்றிலிருந்து, முட்டான்தோப்பு வழியாக சுந்தரபாண்டியம் பகுதிக்கு தனி பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க

பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெரும்: ராமதாஸ்

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் பாமக நிறுவனா் ராமதாஸ். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஆக.10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் மாநாடு இடத்தை வெள்ளிக்கிழமை பா... மேலும் பார்க்க