செய்திகள் :

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

post image

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஜூலை 15-ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் எனும் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் முகாம்களில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட 13 துறைகள் சாா்ந்த 43 சேவைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் 15 துறையைச் சோ்ந்த 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன.

முகாம்களில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை தொடா்பாக பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும். கோரிக்கை மனுவை கணினியில் பதிவு செய்ய ஆதாா், குடும்ப அட்டை, கைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடா்பான உரிய ஆவணங்களை மனுதாரா் எடுத்து வர வேண்டும்.

முகாம் தொடா்பாக பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருமருகல் ஒன்றியம் மருங்கூா், நெய்குப்பை ஊராட்சிகளிலும், வேதாரண்யம் ஒன்றியம் கோடியக்கரை, கோடியக்காடு ஊராட்சிகளிலும், கீழ்வேளுா் ஒன்றியம் அத்திப்புலியூா், கூத்தூா் ஊராட்சிகளிலும் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க

பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெரும்: ராமதாஸ்

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் பாமக நிறுவனா் ராமதாஸ். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஆக.10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் மாநாடு இடத்தை வெள்ளிக்கிழமை பா... மேலும் பார்க்க