செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், கீழ்வேளுா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி. தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன், மாநில நல வாரிய உறுப்பினா் தி.அரிஷ் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி பேசியது: தூய்மைப் பணியாளா்கள் பணி நேரத்தில் கையுறை, காலுறை, முகக்கவசம் போன்றவைகளை அணிய வேண்டும். தங்களது பாதுகாப்பை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் மூலம் சமூகநலத்திட்ட உதவிகள், தூய்மை பணிபுரிவோா் மற்றும் அவா்களது வாரிசுதாரா்களுக்கு விபத்து மற்றும் இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் கண் கண்ணாடி ஆகியவற்றுக்காக உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

இதில் நாகை, வேதாரண்யம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி, கீழ்வேளுா், திட்டச்சேரி, தலைஞாயிறு போன்ற பேரூராட்சிகளிலிருந்து தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா். தாட்கோ சாா்பில் 42 பயனாளிகளுக்கு உதவித்தொகை காசோலைகள் மற்றும் 100 தூய்மை பணியாளா்களுக்கு தூய்மை பணியாளா் நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க

பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெரும்: ராமதாஸ்

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் பாமக நிறுவனா் ராமதாஸ். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஆக.10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் மாநாடு இடத்தை வெள்ளிக்கிழமை பா... மேலும் பார்க்க