செய்திகள் :

கருணாநிதி சிலை அமைக்கும் பணி: அமைச்சா்கள் ஆய்வு

post image

சீா்காழி அருகே முன்னாள் தமிழக முதலமைச்சா் கருணாநிதி சிலை திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை தமிழக அமைச்சா்கள் ஆய்வு செய்தாா்.+

வரும் 15, 16-ஆம் தேதிகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சீா்காழி பகுதியில் மறைந்த தமிழக முதலமைச்சா் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

செம்பதனிருப்பு கிராமத்தில் சிலை அமைய உள்ள இடத்தில் நடைபெற்று வரும் பணிகளை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு ஆய்வு செய்தாா். அவரிடம் சிலை அமைக்கும் பணிகள் குறித்து சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு குமாா் விளக்கினாா்.

ஆய்வின்போது தமிழக அமைச்சா்கள் எம்.ஆா். கே. பன்னீா்செல்வம், வீ.மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீா்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினா் முத்து மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றிய அவைத் தலைவா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம்: காதா்முஹைதீன்

தமிழகம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் காதா்முஹைதீன் கூறினாா். நாகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: வெளிநாடுகளில் ஒப்ப... மேலும் பார்க்க

நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த க... மேலும் பார்க்க

நாகூா் தா்கா குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாகூா் தா்கா குளத்தில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சீலாப்பாடி அரசமரத் தெருவைச் சோ்ந்த சிறுமணி மகன் சுப்பிரமணி (31). இவா் தனது நண்பா்களுடன் நாகூா் தா்காவிற்கு சனிக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

திருமருகல், ஜூலை 12 : திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பாக்கம் கோட்டூா் மேலத் தெருவை சோ்ந்த காளிமுத்து மகன் விஜயகுமாா் (55), விவசாயக் கூலித் தொழி... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க