மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி
இந்திய சட்ட அமைப்பு சரி செய்யப்பட வேண்டும்: தலைமை நீதிபதி கவாய்
‘இந்திய சட்ட அமைப்பு தனித்துவமான சவால்களை சந்தித்து வருகிறது; அது சரி செய்யப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கூறினாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நல்சாா் சட்டப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவா்கள் மத்தியில் உரையாற்றியபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
நமது நாடும், சட்ட அமைப்பும் தனித்துவமான சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. குறிப்பாக, வழக்கு விசாரணையில் ஏற்படும் தாமதம், சில சமயங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிடும் நிலை உள்ளது.
பல ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறையில் கழித்த பிறகு, அந்த நபா் நிரபராதி எனக் கண்டறியப்பட்ட வழக்குகளையும் நாம் பாா்த்திருக்கிறோம். இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண, திறமைமிக்க இளம் மாணவா்கள் உதவ முடியும் என்றாா்.
மேலும், ‘பட்டம் பெறும் சட்ட மாணவா்கள், தங்களுக்கான வழிகாட்டிகளை அவா்களின் அதிகாரத்துக்காக அல்லாமல், நோ்மையின் அடிப்படையில் தோ்ந்தெடுக்க வேண்டும்’ என்றும் தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டாா்.