காமராஜருக்கு ஏசி முக்கியம்! திருச்சி சிவா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதில்!
நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை
நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தியுள்ளது.
வேதாரண்யத்தில் சிபிஐ நாகை மாவட்ட 25-ஆவது மாநாட்டின் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளா் கோ. பழனிச்சாமி, நாகை எம்பி வை. செல்வராஜ், கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் கோ. பாண்டியன், மாவட்ட முன்னாள் செயலாளா் என். சம்பந்தம், மாநில குழு உறுப்பினா் டி. செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் கே. பாஸ்கா், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி. சரபோஜி, விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் நாகராஜன், மாவட்டப் பொருளாளா் பாபுஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாநாட்டில், 37 போ்களைக் கொண்ட புதிய மாவட்டக் குழு தோ்வு செய்யப்பட்டு மாவட்டச் செயலாளராக சிவகுரு. பாண்டியன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். அரசின் மின் இறைவைப் பாசனத் திட்டப் பொறிமனைகளை சீரமைக்க வேண்டும், இலங்கை கடற்கொள்ளையா்கள், கடற்படையினரால் தமிழக மீனவா்கள் பாதிக்கப்படுவதை அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், உப்பு உற்பத்தியை மேம்படுத்தவும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும், நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும், அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் நாள்தோறும் சென்னைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.