செய்திகள் :

மதுரையில் தவெக 2 ஆவது மாநில மாநாடு: பந்தகால் நடும் விழா

post image

மதுரையில் தமிழக வெற்றிக் கழத்தின் 2-ஆவது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ள நிலையில், மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழா புதன்கிழமை காலை (ஜூலை 16) பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒருபுறமும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபுறமும் இருக்க நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் இரண்டு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியுள்ளனர்.

மேலும், தவெகவின் முதல்வர் வேட்பாளர் நான்தான் விஜய்யும் அறிவித்துள்ளதால், தேர்தல்களத்தின் தீவிரம் இன்னும் அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே பாரப்பத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது.

பந்தல்கால் நடும் விழா

மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைய உள்ளது.

இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மாநாட்டிற்கான அனுமதி மனுவை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தவெக மாவட்ட செயலாளர், அனைத்து நிர்வாகிகள் மகளிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இதனிடையே, ஆகஸ்ட் 25 ஆம் தேதி தேதி மதுரையில் நடைபெற உள்ள தவெக இரண்டாவது மாநாடு வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம் என தவெக தலைவர் விஜய் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21 ஆம் ஆண்டு நினைவு நாள்

The flag-planting ceremony for the 2nd state conference of the TVK Party was held in Madurai on Wednesday morning (July 16) under the leadership of General Secretary Anand.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?: அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை (ஜூலை 16) சைதாப்பேட்டை, 140 ஆவது வார்டு, சென... மேலும் பார்க்க

திருவள்ளுவரை அவமதிப்பது மன்னிக்க முடியாத செயல்: ப.சிதம்பரம்

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை குறள் என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், போலி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற நாகாலாந்து வாலிபர் கைது

பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளஅ வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்த நாகாலாந்து வாலிபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவ... மேலும் பார்க்க

ரூ.9 கோடி இழப்பீடு கோரி ரவி மோகன் வழக்கு: படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காத காரணத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21 ஆம் ஆண்டு நினைவு நாள்

நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் உ... மேலும் பார்க்க

சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து: காரணம் என்ன?

சென்னை: போதிய பயணிகள் இல்லாலததால் சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூர், மும்பை செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்... மேலும் பார்க்க