செய்திகள் :

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறிய ரூ.110 கோடி: அரசாணை வெளியீடு

post image

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை:

தமிழகத்தில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 11 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளதாகவும், அந்த எண்ணிக்கை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புற்றுநோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் மண்டல புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதைத் தவிர, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 12 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கூடிய வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

அதற்கேற்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனை உபகரணங்களும், மனிதவளமும் மேம்படுத்ததி திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ரூ.110.96 கோடி ஒதுக்கீடு செய்து நிா்வாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சே... மேலும் பார்க்க

கடலூா் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியா் பணிநீக்கம்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா். காமராஜரின் பிறந... மேலும் பார்க்க

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்... மேலும் பார்க்க

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க