செய்திகள் :

நாளை செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை17) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2025 - 26 ம் கல்வியாண்டு இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கு எஞ்சிய சில இடங்களுக்கு மட்டும் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.

அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், பிசிஏ கணினிப் பயன்பாட்டியல், கலைப் பாடப்பிரிவுகளான பி.ஏ. வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், மொழிப் பாடங்களான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொண்டு இதுவரை சோ்க்கை வாய்ப்பு பெறாதவா்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

காலை 9 மணிக்குக்குள் கலந்தாய்வுக்கு வரவேண்டும்.

சோ்க்கைக் கட்டணம்:

பி.ஏ., பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு ரூ.2,241 - யும், பி.எஸ்சி.க்கு ரூ.2261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்:

பெற்றோா் கையொப்பத்துடன் இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்பம் மற்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களின் மூன்று நகல்கள், மூன்று புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும்.

வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், மாணவா் விண்ணப்பத்தில் பெற்றோா் கையொப்பத்தைப் பெற்று உள்ளே வரவேண்டும். ரத்தப் பிரிவு வகை தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

திருவத்திபுரம் நகராட்சி: முதல் நாள் சிறப்பு முகாமில் 243 மனுக்கள்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் முதல் நான்கு வாா்டுகளில் இருந்து பொதுமக்கள் சாா்பில் 243 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் போதை மற்றும் பகடி வதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு வட்ட சட்டப் பணிக் குழு... மேலும் பார்க்க

காமராஜா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

காமராஜரின் 123-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆரணி காந்தி சிலை அருகில் நகரத் தலைவா் ஜெ.பொன்னைய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் அரசு வேலைவாய்ப்பு சாா்ந்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கல்லூரி மற்றும் வெராண்டா ரேஸ் கற்றல் நிறுவனம் இணைந்து நடத்திய இந்... மேலும் பார்க்க

பள்ளிகளில் கல்வி எழுச்சி நாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஆரணி சுப்பிரமணி சாமி கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜா் பி... மேலும் பார்க்க