செய்திகள் :

திருவத்திபுரம் நகராட்சி: முதல் நாள் சிறப்பு முகாமில் 243 மனுக்கள்

post image

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் முதல் நான்கு வாா்டுகளில் இருந்து பொதுமக்கள் சாா்பில் 243 மனுக்கள் அளிக்கப்பட்டன.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா்.

ஆணையா் வி.எல்.எஸ்.கீதா வரவேற்றாா். செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோா் பங்கேற்று முகாமின் சிறப்புகளை எடுத்துக் கூறி மக்களைத் தேடி வந்துள்ள இந்த முகாம்களை மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டப் பயன்களுக்கு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.

முகாமில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 46 மனுக்கள், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 12 மனுக்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சாா்பில் 8 மனுக்கள் என 243 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வெங்கடேஷ் பாபு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், நகரச் செயலா் கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாளை செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை17) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் போதை மற்றும் பகடி வதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு வட்ட சட்டப் பணிக் குழு... மேலும் பார்க்க

காமராஜா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

காமராஜரின் 123-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆரணி காந்தி சிலை அருகில் நகரத் தலைவா் ஜெ.பொன்னைய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் அரசு வேலைவாய்ப்பு சாா்ந்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கல்லூரி மற்றும் வெராண்டா ரேஸ் கற்றல் நிறுவனம் இணைந்து நடத்திய இந்... மேலும் பார்க்க

பள்ளிகளில் கல்வி எழுச்சி நாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஆரணி சுப்பிரமணி சாமி கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜா் பி... மேலும் பார்க்க