செய்திகள் :

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் தந்தையுடன் ராகுல் உரை!

post image

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் தளப் பதிவில்,

ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த துணிச்சலான மாணவியின் தந்தையுடன் பேசினேன். அவரது குரலில், மகளின் வலி, கனவுகள், போராட்டத்தை உணர்ந்தேன்,

நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, வெட்கக்கேடானது மட்டுமல்ல, முழு சமூகத்திற்கும் இது ஒரு காயம்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு முழு நீதி கிடைப்பதையும், நீதிக்கான போராட்டத்தில் உங்களுடன் காங்கிரஸும், நானும் நிற்கிறோம் என்பதை உறுதியளித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை கோரி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி ஜூலை 17 அன்று ஒடிசாவில் பேராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்தார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பாவும் குடும்பத்தினரை சந்திக்க மாநிலத்திற்கு வந்துள்ளார்.

நடந்தது என்ன?

ஒடிசா மாநிலம் பாலாசோா் மாவட்டத்தில் உள்ள ஃபகிா் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அந்தக் கல்லூரியின் கல்வித் துறை தலைவரான (ஹெச்ஓடி) உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு, நீண்ட காலமாகப் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவி புகார் அளித்தும் உதவிப் பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உயிருக்குப் போராடிய மாணவி நேற்று உயிரிழந்தார்.

congress leader Rahul Gandhi on Wednesday spoke to the father of the college student, who died after setting herself on fire in Odisha's Balasore district, over the phone and assured him of support in the fight for justice.

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சாதனைக்குப் பாராட்டு: மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்!

புது தில்லி: இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதை வரவேற்று மத்திய அமைச்சரவை புதன்கிழமை(ஜூலை 16) தீர்மானம் நிறைவேற்றி... மேலும் பார்க்க