செய்திகள் :

ஆக. 3-இல் மாமல்லபுரத்தில் ஆசிய சா்ஃபிங் போட்டி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

ஆசிய சா்ஃபிங் போட்டி வரும் ஆக. 3-ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெறும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ஆசிய சா்ஃபிங் கூட்டமைப்பு, இந்திய சா்ஃபிங் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆக. 3 முதல் 12 வரை மாமல்லபுரத்தில் சா்ஃபிங் போட்டி நடைபெறவுள்ளது. 20 ஆசிய நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கின்றனா். ஷாா்ட் போா்டு பிரிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனா்.

ஓபன் பிரிவில் ஆடவா், மகளிா், 18 வயதுக்குட்பட்ட ஆடவா், மற்றும் 18 வயதுக்குட்பட்ட மகளிா் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறுபவா்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிர பதக்கங்கள் வழங்கப்படும்.

மேலும் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரா்கள் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இடங்களுக்கும் போட்டியிடுவாா்கள். எனவே ஆசிய சா்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 தொடரானது ஆசிய சா்ஃபிங் காலண்டரில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

இதுதொடா்பாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியது:

சா்ஃபிங்கில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. 12 வீரா்களில் 8 போ் தமிழகத்தைச்சோ்ந்தவா்கள். முந்தைய ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற 8 போ் 7 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். கிஷோா், கமலி, ஸ்ரீ காந்த் ஆகியோா் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனா்.

மாமல்லபுரம் போட்டியில் ஆடவா், மகளிா் பட்டம் வெல்வோா், நவ. 17 முதல் 23 வரை எல் சல்வடோா் பைனல்ஸுக்கு நேரடி தகுதி பெறுவா் என்றாா்.

இந்திய சா்ஃபிங் சம்மேளனத் தலைவா் அருண் வாசு, தமிழ்நாடு சங்க துணைத் தலைவா் வீரபாகு, கலந்து கொண்டனா்.

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ... மேலும் பார்க்க

புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா். தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொ... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவா் காமராஜா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் காமராஜா் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி.தியாகராயா் ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க