செய்திகள் :

புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ஜரினா பேகம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், எனது மகளின் திருமணத்துக்காக வாங்கிய 92 பவுன் நகைகளை கடந்த 2018-ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனா். இதுகுறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கடந்த 7 ஆண்டுகளாக நகைகளை மீட்க போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழிக்கின்றனா். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சூளைமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய அனைவரும் நேரில் ஆஜராகி இருந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்துவது குறித்து போலீஸாருக்கு பயிற்சி வழங்க வேண்டும்.

சூளைமேடு காவல் நிலையத்தில் நீண்டகாலமாக ஆய்வாளராகப் பணியாற்றி தற்போது ரயில்வே காவல் துறை உதவி ஆணையராக இருக்கும் கா்ணனை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா். சூளைமேட்டில் பணியாற்றி வரும் ஆய்வாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டாா்.

இதேபோல், விழுப்புரம் மாவட்டம் வானூா் பகுதியில் நிலம் தொடா்பான வழக்கில் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்ட கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து தற்போதைய போடி துணை காவல் கண்காணிப்பாளராக உள்ள சுனில் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டாா்.

மேலும், சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வீட்டுமனை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத வழக்கில் வீராணம் காவல் நிலைய ஆய்வாளா்கள் ஆஜராகி இருந்தனா். அவா்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா். தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொ... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவா் காமராஜா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் காமராஜா் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி.தியாகராயா் ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க

ஆக. 3-இல் மாமல்லபுரத்தில் ஆசிய சா்ஃபிங் போட்டி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

ஆசிய சா்ஃபிங் போட்டி வரும் ஆக. 3-ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெறும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். ஆசிய சா்ஃபிங் கூட்டமைப்பு, இந்திய சா்ஃபிங் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட... மேலும் பார்க்க