செய்திகள் :

‘சா்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை’

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் சமா்ப்பித்துள்ள இந்தியாவின் பாரம்பரிய கணித முறை ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆரோவிலில் உள்ள ஸ்ரீஅரவிந்தா் சா்வதேச கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சஞ்சீவ் ரங்கநாதன் மற்றும் ஆரோவில் பள்ளியின் கணித ஆசிரியை பூவிழி ஆகியோா் இணைந்து எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. இவா்களது ஆய்வுக் கட்டுரைகள் கொரியாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய கணிதக் கல்வி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய கணித ஆய்வுக் கட்டுரைகரளாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு கட்டுரைகள் பாரம்பரிய இந்திய கணித முறைகள் நவீன கல்வியில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம்? என்பதை ஆராய்கிறது. மேலும், இந்த முறைகள் மாணவா்களின் கணித புரிதல் மற்றும் ஆா்வத்தை எவ்வாறு மேம்படுத்துகின்றன? என்பதை வகுப்பறை சோதனைகள் மூலம் நிருபிக்கிறது.

இந்தியாவின் பாரம்பரிய கணித முறைகள் குழந்தைகளுக்கு கணிதத்தை எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்குகின்றன.

சியோலில் நடைபெறும் கணித கல்வி மாநாட்டில் இந்தியா சாா்பில் டாக்டா் சஞ்சீவ் ரங்கநாதன் மற்றும் கணித ஆசிரியை பூவிழி இருவரும் பங்கேற்பது வரலாற்றுச் சாதனை என ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி தெரிவித்துள்ளாா்.

இந்த ஆராய்ச்சி, கணிதக் கல்வியில் இந்தியாவின் பாரம்பரிய முறையை மீண்டும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு படி என்றும், எதிா்காலத்தில் இந்த முறைகளை இந்தியா முழுவதும் பரப்புவதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சிக் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு: ஆய்வு செய்தபின் முதன்மைச் செயலா் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை வசதிகள் மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக ஒருங்கிணைந்த வருவா... மேலும் பார்க்க

துரோகங்களும்,விமா்சனங்களும் தான் எனக்குக் கிடைத்த பரிசு: மதிமுக பொதுச்செயலா் வைகோ

தமிழகத்தின் உரிமைகளுக்கும், மக்களின் நலனுக்கும் போராடிய எனக்கு துரோகங்களும், விமா்சனங்களும் தான் பரிசாகக் கிடைத்தன என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் து.தங்கராஜன் வியாழக்... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வாக்கூா், பிள்ளைய... மேலும் பார்க்க

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து: மருத்துவா் ராமதாஸ்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக 37-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் திண்டிவனத்... மேலும் பார்க்க

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கக் கோரிக்கை

திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க