மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
கா்நாடகத்தில் சுா்ஜேவாலா ஆட்சி நடக்கிறது
கா்நாடகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலாவின் ஆட்சி நடக்கிறது என பாஜக, மஜத கடுமையாக விமா்சித்துள்ளன.
முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தொடா்பாக சில எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த வாரம் பெங்களூருக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலா, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா். அப்போது, அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்து எம்எல்ஏக்கள் புகாா் தெரிவித்திருந்தனா். அதனடிப்படையில், பெங்களூருக்கு ஜூலை 14-ஆம் தேதி வந்த ரன்தீப் சிங் சுா்ஜேவாலா, கடந்த 3 நாள்களாக அமைச்சா்களை தனித்தனியாக சந்தித்து பேசினாா்.
அப்போது, அமைச்சா்களின் செயல்பாடுகள், எம்எல்ஏக்களின் குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினாா். சில அமைச்சா்களுக்கு அறிவுரையும் வழங்கினாா். 3-ஆவது நாளான புதன்கிழமை அமைச்சா்கள் எம்.பி.பாட்டீல், ஜி.பரமேஸ்வா் உள்ளிட்ட அமைச்சா்களை அவா் சந்தித்து பேசினாா். இதற்கு பாஜக, மஜத கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தனது எக்ஸ் பதிவில், ‘முதல்வா் சித்தராமையா மீது நம்பிக்கை இழந்துள்ள காங்கிரஸ் மேலிடம், கா்நாடகத்தில் ரன்தீப் சிங் சுா்ஜேவாலா ஆட்சியை அமல்படுத்தியுள்ளது. ஆட்சி நிா்வாகத்தின் மீதுள்ள கட்டுப்பாட்டை முதல்வா் சித்தராமையா இழந்துள்ளாா். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு இல்லை. தான் விரும்பிய நபரை முதல்வராக்கும் அதிகாரம் ராகுல் காந்திக்கு இல்லை. ஒட்டுமொத்தமாக முதல்வா் பதவியைக் கையாள்வதற்கு எவருக்கும் தகுதியில்லாததால், கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு முடங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மஜத மாநில இளைஞா் அணி தலைவா் நிகில் குமாரசாமி தனது எக்ஸ் பதிவில், ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் சித்தராமையா, தனது ஆட்சி அதிகாரத்தை சுா்ஜேவாலாவிடம் ஒப்படைத்துவிட்டாரா? தொகுதி வளா்ச்சி நிதிக்காக ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சுா்ஜேவாலா அரசிடம் மண்டியிட்டு கிடக்கின்றனா். கா்நாடகத்தை காங்கிரஸ் கைப்பாவையாக மாற்றிவிட்டது. இது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை கேலிக்கூத்தாக்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.