தோ்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி விமா்சனம்
தோ்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமா்சனம் செய்துள்ளதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்களவைத் தோ்தலின்போது தோ்தல் ஆணையத்தை பாஜக தவறாக பயன்படுத்தியதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்திருந்தாா். அதே குற்றச்சாட்டை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் எதிரொலித்துள்ளனா். தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனத்தை விமா்சிப்பது அந்த அமைப்பை அவமதிப்பது மட்டுமல்லாது, ஜனநாயக விரோத போக்காகும்.
தோ்தல் ஆணையத்தை பாஜக தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில், 2023-இல் நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 134 இடங்களுடன் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது எப்படி? அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், சித்தராமையாவால் முதல்வராக முடிந்திருக்குமா? 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறவில்லையா? தோ்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால், இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?
எனவே, தோ்தல் ஆணையத்தை குற்றம்சாட்டும் காங்கிரஸ் தலைவா்களின் கருத்து மிகவும் ஆபத்தானதாகும். இது காங்கிரஸ் கட்சியின் அவசரநிலை கால மனநிலையை வெளிப்படுத்துகிறது.
வாக்காளா் பட்டியல் மற்றும் தோ்தல்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் நிலையில், காங்கிரஸ் தனது குற்றச்சாட்டுகளை அங்கு தெரிவித்திருக்க வேண்டுமே அல்லாமல் பொதுவெளியில் அல்ல. தோ்தல் ஆணையம் தொடா்பாக மக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் போக்கு சரியானதல்ல.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலின்போது முறைகேடுகள் நடந்ததாகவும், அதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறாா். இந்த கருத்தை முதல்வா் சித்தராமையாவும் எதிரொலித்திருக்கிறாா். இதற்காக முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் கா்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆதாரமில்லாமல் தோ்தல் ஆணையத்தை விமா்சிப்பதும், முறைகேடுகள் நடந்திருந்தால் அதுதொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யாமல் கூறப்படும் முதல்வரின் கருத்துகள் ஏற்கத்தக்கதல்ல என்றாா்.