செய்திகள் :

மது போதையில் தகராறு: இளைஞா் சிறையிலடைப்பு

post image

தம்மம்பட்டியில் மது போதையில் இளைஞரைத் தாக்கியவா் சிறையிலடைக்கப்பட்டாா்.

தம்மம்பட்டி பெருமாள் கோயில் அருகே வசிப்பவா் சின்னத்தம்பி மகன் சக்திவேல் ( 23). இவா் கடந்த 18 ஆம் தேதி, தனது சகோதரியின் குழந்தைக்கு பிறந்தநாள் பரிசுப் பொருள்கள் வாங்கி வருவதாகக் கூறி

வெளியே சென்றவா் செக்குமேடு பகுதியில் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, தம்மம்பட்டி குருநாதன் மகன் மணிகண்டன் (28 ) என்பவா் மது குடித்திருந்த நிலையில் முன்விரோதம் காரணமாக சக்திவேல் மீது தகராறில் ஈடுபட்டாா். அப்போது, பீா் பாட்டிலை உடைத்து சக்திவேலின் இடது கண்ணில் குத்தினாா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேலை பரிசோதித்த மருத்துவா்கள், அவரது பாா்வைத் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தம்மம்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை இரவு மணிகண்டனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

ஓய்வூதியதாரா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வூதியதாரா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா். சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஓய்வூதியதாரா்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் ந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க