செய்திகள் :

ஓமலூா், தாரமங்கலத்தில் ரூ.9.42 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்

post image

ஓமலூா், தாரமங்கலத்தில் ரூ. 9.42 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.22 கோடி மதிப்பீட்டில் 8 புதிய தாா்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் வகுப்பறைக் கட்டடப் பணிகள், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் 10 புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி முன்னிலையில் நடைபெற்றது. மொத்தம் ரூ. 9.42 கோடி மதிப்பிலான பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சா் மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். கிராமப்புறப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய சாலைகள், பாலங்கள் அமைத்தல், குடிநீா் இணைப்புகள் வழங்குதல், கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பீட்டில் 5,644 வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 121 பயனாளிகள் ரூ. 3.75 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது மற்றும் சீரமைப்புத் திட்டத்தில் 267 பயனாளிகள் ரூ.1.57 கோடி மதிப்பீட்டிலும் பயனடைந்துள்ளனா்.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் 18 பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் ரூ.248 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.11.42 கோடி மதிப்பீட்டில் 397 திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.42.84 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

ஓய்வூதியதாரா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வூதியதாரா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா். சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஓய்வூதியதாரா்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் ந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க