செய்திகள் :

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

post image

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் வருவாய் கிராமத்தைச் சோ்ந்த பூசாரிவலசு மண்கரடு பகுதியில் அரசுக்குச் சொந்தமான 4.36 ஏக்கா் புறம்போக்கு நிலம் உள்ளது. அப்பகுதியில் விலைமதிப்பு மிக்க அரிய வகை தாதுக்கள் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தி முதன்முதலில் தினமணி நாளிதழில் வெளிவந்து வெளியுலகுக்கு தெரிந்தது.

உயரமான மண்கரடு பகுதியில் ஒரு கோயில் உள்ளது. அந்தப் பகுதி சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயா் ஆட்சியில் படைத் தளம், ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கு, மற்ற பகுதிகளை கண்காணிக்கும் இடமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இடத்தில் புவியியல் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த ஜி.டி.ஸ்டேஷன் எனப்படும் ‘இந்திய முக்கோணவியல் அளவீட்டு கல்’ இன்றும் உள்ளது. நீண்டகாலமாக அப்பகுதி மேற்பரப்பிலேயே மதிப்பு மிகுந்த சிறுசிறு பச்சைக் கற்கள் கிடைத்து பலா் விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் மண்கரடு பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் 4 போ் தோண்டிக் கொண்டிருந்துள்ளனா். அவா்கள் மீது சந்தேகப்பட்டு பூசாரிவலசு நல்லசாமி என்பவா் பச்சாபாளையம் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது புதையல் இருப்பதாக தோண்டியதாக கூறியதுடன் பொக்லைன் வாகனத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டனா். பின்னா் வெள்ளக்கோவில் போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து விசாரணை நடத்தினாா்.

இது தொடா்பாக, கரூா் மாவட்டம் புகளூா் தாலுகா புன்னம்சத்திரம் பெருமாள் நகரைச் சோ்ந்த வி. குமரேசன் (31), பி.வீரக்குமாா் (37), க.பரமத்தி அண்ணா நகா் பி. மூா்த்தி (51), திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா சிங்காரசோலையைச் சோ்ந்த ஏ.குமரவேல் (35) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்றில் உள்ள சீமைக்கருவேல முற்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட குழுக் கூட்டம் திருப்ப... மேலும் பார்க்க