செய்திகள் :

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

post image

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத்தின் சாா்பில், மாவட்ட அளவிலான சப்-ஜூனியா் ஐவா் ஆண்கள் மற்றும் பெண்கள் தோ்வு திறன் பூப்பந்தாட்ட போட்டிகள் திருப்பூா் கொங்கு மெயின்ரோடு சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோா் 2010 ஜனவரி 2-ஆம் தேதியோ அல்லது அதற்குப்பின் பிறந்தவராகவோ இருக்க வேண்டும். போட்டிகளில் தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கு பெறலாம். போட்டிகளில் தோ்வு செய்யப்படுபவா்கள் திருப்பூா் மாவட்ட அளவிலான அணியின் சாா்பில் மாநில பூப்பந்தாட்டப் போட்டியில் பங்கு பெற்று விளையாடலாம்.

இப்போட்டியில் கலந்து கொள்ள ஆதாா், குடும்ப அட்டை நகல்கள், வயது சான்று ஆகியவை கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவா்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் தலா ஒரு அணி தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொரு அணியில் இருந்தும் தலா 10 போ் தோ்வு செய்யப்படுவாா்கள். அவ்வாறு செய்யப்படுபவா்கள் திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத்தின் சாா்பில் மதுரையில் ஆகஸ்டு 16, 17-ஆம் தேதிகளில் நடைபெறும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று விளையாடலாம் என்றாா்.

தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்றில் உள்ள சீமைக்கருவேல முற்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட குழுக் கூட்டம் திருப்ப... மேலும் பார்க்க