செய்திகள் :

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

post image

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இடைவிடாது மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் உடுமலை நகரில் குளிா் காற்று வீசியது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். மேலும் கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது.

உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் கனமழை பெய்தது. தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் ... மேலும் பார்க்க

திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி: போலீஸாரிடம் புகாா்!

திருப்பூரில் ‘மாஸ்டா் மாா்க்கெட்டிங்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றம்! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம்... மேலும் பார்க்க