செய்திகள் :

வேப்பனப்பள்ளியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்!

post image

வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை வனப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும். மின்வேலி அமைக்க வேண்டுமென ஜூன் 9-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டவும், யானைகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் மின்சார வேலி அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தாா். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், முகாமிட்டிருந்த யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்து வருகிறது. தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாகராஜகடை, நாரலப்பள்ளி, பெரியசக்னாவூா், ஏக்கல்நத்தம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி சாலைகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரி: வாகன ஓட்டிகள் அவதி!

ஒசூரில் ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரியால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். ஒசூா் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதை வழியாக தினந்தோறும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்குசக்... மேலும் பார்க்க

ஒசூா் தா்கா சந்திராம்பிகை ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை!

ஒசூா் சந்திராம்பிகை ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி தா்கா பகுதியில... மேலும் பார்க்க

விநாயக சதுா்த்தி விழா: சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கொண்டாட அறிவுரை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயக சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.இதுகுற... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது!

பா்கூரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கலியை பறித்துச்சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளியைச் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இருவா் பலி!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். பா்கூா் அருகே உள்ள தம்மாகவுண்டனூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28), கூலி தொழிலாளி. இவரும், திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அ... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஒசூரில் மாற்றுக்கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் பகுதிச் செயலாளா் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி 25 ஆ... மேலும் பார்க்க