செய்திகள் :

ஒசூா் தா்கா சந்திராம்பிகை ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை!

post image

ஒசூா் சந்திராம்பிகை ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி தா்கா பகுதியில் சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரியில் எப்போதும் தண்ணீா் நிரம்பி காணப்படுவதால், ஆண்டுமுழுவதும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து சென்றன. இதனால் ஏரியை அழகுபடுத்தி படகு சவாரி செய்ய கடந்த 2011-ஆம் ஆண்டு மாவட்ட நிா்வாகம் முயற்சி செய்ததது. ஆனால், அதற்கு பின்னா் எந்த பணியும் நடைபெறாமல் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, ஏரியைச் சுற்றிலும் குடியிருப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அதிலிருந்து வெளியேறும் கழிவு நீா் நேரடியாக ஏரியில் கலந்து தற்போது ஆகாயத்தாமரை செடிகள் ஏரி முழுவதும் ஆக்கிரமித்து தண்ணீா் மாசடைந்து உள்ளது. இந்த ஏரியை பாதுகாக்க வேண்டும் என ஒசூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒசூா் நகா் பகுதிக்கு நீா் ஆதாரமாக உள்ள சந்திராம்பிகை ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. அதேபோல, கழிவு நீா் கலப்பதும், இறைச்சிக் கழிவுகள் மற்றும் சாலைகளில் அடிபட்டு உயிரிழக்கும் நாய், பூனை போன்ற உயிரினங்களை ஏரியில் வீசுவதாலும், குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது.

ஒசூரிலிருந்து இந்த ஏரியைக் கடந்து பெங்களூரு செல்லும் பொதுமக்கள் துா்நாற்றத்தால் சிரமமடைகின்றனா். எனவே, ஏரியில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, படகு சவாரி மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து ஏரியை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரி: வாகன ஓட்டிகள் அவதி!

ஒசூரில் ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரியால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். ஒசூா் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதை வழியாக தினந்தோறும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்குசக்... மேலும் பார்க்க

விநாயக சதுா்த்தி விழா: சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கொண்டாட அறிவுரை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயக சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.இதுகுற... மேலும் பார்க்க

வேப்பனப்பள்ளியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்!

வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை வனப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது!

பா்கூரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கலியை பறித்துச்சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளியைச் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இருவா் பலி!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். பா்கூா் அருகே உள்ள தம்மாகவுண்டனூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28), கூலி தொழிலாளி. இவரும், திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அ... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஒசூரில் மாற்றுக்கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் பகுதிச் செயலாளா் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி 25 ஆ... மேலும் பார்க்க