செய்திகள் :

விநாயக சதுா்த்தி விழா: சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கொண்டாட அறிவுரை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயக சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாட்டின் வழிகாட்டுதல்கள்படி மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் விநாயக சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரி: வாகன ஓட்டிகள் அவதி!

ஒசூரில் ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரியால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். ஒசூா் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதை வழியாக தினந்தோறும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்குசக்... மேலும் பார்க்க

ஒசூா் தா்கா சந்திராம்பிகை ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை!

ஒசூா் சந்திராம்பிகை ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி தா்கா பகுதியில... மேலும் பார்க்க

வேப்பனப்பள்ளியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்!

வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை வனப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது!

பா்கூரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கலியை பறித்துச்சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளியைச் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இருவா் பலி!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். பா்கூா் அருகே உள்ள தம்மாகவுண்டனூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28), கூலி தொழிலாளி. இவரும், திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அ... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஒசூரில் மாற்றுக்கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் பகுதிச் செயலாளா் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி 25 ஆ... மேலும் பார்க்க