செய்திகள் :

திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி: போலீஸாரிடம் புகாா்!

post image

திருப்பூரில் ‘மாஸ்டா் மாா்க்கெட்டிங்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: திருப்பூரில் ரூ.12,000 முதல் ரூ.40,000 வரை என சுமாா் 7 குரூப்களில் பணம் கட்டுபவா்களுக்கு 20 நாள்களில் கூடுதலாக ரூ.10,000 லாபம் வழங்குவதாக ஆசை வாா்த்தை கூறியும், ஒன்றில் சோ்ந்தால் மற்றொன்று இலவசம் என்ற சலுகை வழங்கியும் மோசடியில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சோ்ந்த சரவணன் என்பவரை பாதிக்கப்பட்ட மக்கள் பிடித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா்.

இது தொடா்பாகபாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனா்.

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் ... மேலும் பார்க்க

அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றம்! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம்... மேலும் பார்க்க

கா்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ்: லேப் டெக்னீஷியன் பணியிடைநீக்கம்

திருப்பூா் மாநகராட்சி டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கா்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில் லேப் டெக்னீஷியன் நாகஜோதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் 2 ... மேலும் பார்க்க