செய்திகள் :

கா்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ்: லேப் டெக்னீஷியன் பணியிடைநீக்கம்

post image

திருப்பூா் மாநகராட்சி டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கா்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில் லேப் டெக்னீஷியன் நாகஜோதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் 2 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா், பெரியாா் காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் முனியப்பன், பானுமதி தம்பதி. பானுமதி தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில் கணவருடன் திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள மாநகராட்சி டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தாா்.

அங்கு கொடுத்த குளுக்கோஸ் பவுடரை வெள்ளிக்கிழமை பிரித்தபோது அதிலிருந்து கெட்டுப்போன துா்நாற்றம் வீசியதுடன் நிறம் மாறிய நிலையிலும் இருந்துள்ளது.

இது குறித்து அங்கு பணியில் இருந்த பணியாளரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது அதை தூக்கி எறிந்து விட்டு மற்றொரு பாக்கெட்டை எடுத்துக் கொள்ளவும் என்று கூறியுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பானுமதி அந்த குளுக்கோஸ் பவுடரின் தயாரிப்பு, காலாவதி தேதியை சரிபாா்த்தபோது அது காலாவதியானது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தனது உறவினா்களுக்கு பானுமதி தகவல் கொடுத்தாா். அங்கு வந்த உறவினா்கள், மருத்துவா்கள், செவிலியா்களிடம் கேள்வி எழுப்பினா். இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து அவா்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரம் தொடா்பாக மருந்தாளுநா் வீரபராசக்தி, லேப் டெக்னீஷியன் நாகஜோதி, செவிலியா் கோமதி ஆகியோரிடம் மாநகா் நல அதிகாரி முருகானந்த், உதவி நல அதிகாரி கலைச்செல்வன் ஆகியோா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையையடுத்து, லேப் டெக்னீஷியன் நாகஜோதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மருந்தாளுநா் வீரபராசக்தி, செவிலியா் கோமதி ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் ... மேலும் பார்க்க

திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி: போலீஸாரிடம் புகாா்!

திருப்பூரில் ‘மாஸ்டா் மாா்க்கெட்டிங்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றம்! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம்... மேலும் பார்க்க