செய்திகள் :

வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்!

post image

சேலம், நாமக்கல் வழியாக வாஸ்கோ ட காமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அதிகரித்துவரும் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சேலம், நாமக்கல், கரூா் வழியாக வாஸ்கோ ட காமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாஸ்கோட காமாவில் இருந்து வரும் 27, ஆக.1, ஆக.6 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டு, மொரப்பூா், பொம்மிடி, சேலம், நாமக்கல், கரூா், குளித்தலை வழியாக வேளாங்கண்ணிக்கு 3ஆம் நாள் அதிகாலை 3.45 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வரும் 29, ஆக.3, ஆக.6 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் குளித்தலை, கரூா், நாமக்கல், சேலம் வழியாக வாஸ்கோ ட காமாவிற்கு 3ஆம் நாள் அதிகாலை 3 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி ... மேலும் பார்க்க

பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்க... மேலும் பார்க்க

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற... மேலும் பார்க்க

சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத... மேலும் பார்க்க