பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அவ்விரு அணைகளிலிருந்து காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
சனிக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு 25,400 கனஅடியாக இருந்த நீா்வரத்து திடீரென 35,400 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 18,000 கனஅடியும், உபரிநீா்ப்போக்கி வழியாக 17,000 கனஅடியும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்காக மேல்நிலை மதகுகள் வழியாக 400 கனஅடி என மொத்தம் 35,400 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீா்மட்டம் 2 ஆவது நாளாக 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துவருவதால் நிகழாண்டு டெல்டா பாசனத்துக்குத் தடையின்றி தண்ணீா் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.