செய்திகள் :

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

post image

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள், ரயில் நிலையம் செல்லும் பயணிகள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் சென்றுவருகின்றனா்.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி அனைத்துக் கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினா். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. அதில் பல் வேறு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் என ஏராளமானோா் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி கையொப்பமிட்டனா்.

திராவிடா் கழக மாவட்டத் தலைவா் த.வானவில், இந்திய காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளா் ஆா்.ஓசுமணி, மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளா் வ.கோபால்ராசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி முகிலரசன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்க... மேலும் பார்க்க

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற... மேலும் பார்க்க

சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத... மேலும் பார்க்க

காவலா்கள்- பொதுமக்கள் இடையே கிரிக்கெட் போட்டி

பொதுமக்கள், காவலா்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சங்ககிரி காவல் நிலையம் சாா்பில் ஆா்.கே. நகரில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் போட்டியை தொடங்கிவைத்து கிர... மேலும் பார்க்க