செய்திகள் :

சீனா: ”இது முதல் குழந்தை அல்ல...” - பல்கலைக்கழக தங்கும் விடுதியில் குழந்தை பிரசவித்த மாணவி!

post image

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, தனது தங்கும் விடுதி அறையில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக குழந்தை பெற்றெடுத்த சம்பவம், பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இதழின் அறிக்கை படி, 20 வயதான பல்கலைக்கழக மாணவி, இறுதித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தபோது குழந்தையை பிரசவித்துள்ளார்.

தனது பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது, நள்ளிரவில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.

Medical termination of Pregnancy

மாணவியின் நிலையை உணர்ந்து, அறைத் தோழி உடனடியாக அவசர மருத்துவ சேவைகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ஆனால் மருத்துவக் குழு வந்து சேரும் முன்பே, குழந்தை பிறந்திருக்கிறது.

அறைத் தோழி இந்த சம்பவத்தின் போது அமைதியாக இருந்தது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. “இது அவளுக்கு முதல் பிரசவம் இல்லை,” என்று அவர் கூறியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. பின்னர், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது, இது தான் அவரது அமைதிக்கு காரணமாக இருந்ததுள்ளது.

பிறந்த குழந்தையின் எடை 4.5 கிலோவாக இருந்துள்ளது. இது மருத்துவ ரீதியாக “பெரிய குழந்தை” என்று வகைப்படுத்தப்படுகிறது.

தாய்க்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததுள்ளது. கர்ப்பிணி மாணவி தங்கும் விடுதியில் மேற்பார்வையின்றி இருந்தது எப்படி என்று மருத்துவ ஊழியர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஆனால் அந்த மாணவி காலையிலேயே மருத்துவமனைக்கு வர இருந்ததாக கூறியிருக்கிறார். மருத்துவ நிபுணர்களின் விரைவான சிகிச்சையால், தாயும் குழந்தையும் தற்போது பாதுகாப்பாக மீண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க