செய்திகள் :

ஹிமாசலை புரட்டிப்போட்ட பருவமழை: 137 பேர் பலி, 311 சாலைகள் துண்டிப்பு!

post image

ஹிமாசல பிரதேசத்தில் இடைவிடாத பெய்துவரும் பருவமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 311 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மண்டி மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாகத் தேசிய நெடுஞ்சாலை 70 மூடப்பட்டுள்ளது. குலு, மண்டி, சம்பா மாவட்டங்கள் சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளன. மண்டியில் மட்டும் 184 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பருவமழை தொடர்பான சம்பவங்களால் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 137ஐ எட்டியுள்ளது. இதில் நிலச்சரிவுகள், வீடுகள் இடிந்து விழுதல், வெள்ளம் போன்ற பாதிப்புகளில் 77 பேர் உயிரிழந்தனர். மேலும் வானிலை மற்றும் சாலை விபத்துகளால் 60 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சில பகுதிகளில் நிலைமை மேம்பட்டிருந்தாலும், புதிய பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் நிர்வாகங்கள் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். நிலைமையைப் பேரிடர் மீட்புக் குழுவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ அனுராதா ராணா, இயற்கை பேரிடர்களுக்கான தற்போதைய இழப்பீடு போதுமானதாக இல்லை என்றும், சிறப்பு வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு முன்பு வானிலை மற்றும் நிர்வாக ஆலோசனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Relentless monsoon rains continue to cripple public infrastructure in Himachal Pradesh, with 311 roads blocked, 221 water supply schemes disrupted, and 65 power transformers damaged across the state in the last 24 hours, according to the State Disaster Management Authority (SDMA).

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையி... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமான... மேலும் பார்க்க

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த 4 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினரின் முகாம் அருகி... மேலும் பார்க்க

ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு

ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த ஒரு வயது குழந்தையின் உடலை அவரது தந்தை லலித் ஆழ்துளை க... மேலும் பார்க்க

வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை: 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பறிமுதல்

புவனேஸ்வரம்: ஒடிசா மாநில வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து தங்க நாணயங்களும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 1.50 கோடி ரொக்கப் பணம் எண்ணப்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க