செய்திகள் :

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

post image

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, 2019 முதல் 2023 வரை யானைத் தாக்குதல்களில் மொத்தம் 2,869 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் அதிகபட்சமாக ஒடிசாவில் 624 பேரும் அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் 474 பேர், மேற்கு வங்கம் 436 பேர், அசாம் 383பேர் மற்றும் சத்தீஸ்கர் 303 பேர் பலியாகியாகியுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

யானை தாக்குதல்களால் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

2019-20 ஆம் ஆண்டில் 595 ஆக இருந்த பலி எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 629 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் யானை தாக்குதல்களால் முறையே 256 மற்றும் 160 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம், 2020 மற்றும் 2024க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More than 2,800 people lost their lives in elephant attacks in India from 2019 to 2023, with Odisha, Jharkhand and West Bengal among the worst-affected states, the Rajya Sabha was informed on Friday.

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.சிபிஐ (மாவோயிஸ்ட்)-ல் இருந்து பிரிந்த குழுவ... மேலும் பார்க்க

இந்தியாவில் நீரில் மூழ்கி பலியாகும் குழந்தைகள்! உலகளவில் 18% பெற்ற அவலம்!

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் உலகளாவிய எண்ணிக்கையில் இந்தியாவில் 18 சதவிகித அளவில் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.நீரில் மூழ்கி இறப்பவர்கள் குறித்து தன்னார்வத் தொண்டு நிறுவனம் சமீபத்த... மேலும் பார்க்க

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க