செய்திகள் :

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

post image

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள், கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கின.

இதையடுத்து, இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் 2-ம் சுற்று, இன்று (ஜூலை 25) நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் 3-ம் சுற்று வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் இன்று (ஜூலை 25) அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது நிறைவடைந்துள்ள 2-ம் சுற்று பேச்சுவார்த்தைகளின் மூலம், பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகம், முதலீடு, தோற்ற விதிகள், வர்த்தகத்தின் தொழில்நுட்ப தடைகள், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் இடையிலான ஒத்துழைப்புகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகமானது, முந்தைய நிதியாண்டை விட 48.6 சதவிகிதம் அதிகரித்து, கடந்த 2024-25 ஆம் ஆண்டு காலத்தில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

The Union Commerce Ministry has announced that the third round of trade talks between India and New Zealand will be held in September.

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.சிபிஐ (மாவோயிஸ்ட்)-ல் இருந்து பிரிந்த குழுவ... மேலும் பார்க்க

இந்தியாவில் நீரில் மூழ்கி பலியாகும் குழந்தைகள்! உலகளவில் 18% பெற்ற அவலம்!

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் உலகளாவிய எண்ணிக்கையில் இந்தியாவில் 18 சதவிகித அளவில் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.நீரில் மூழ்கி இறப்பவர்கள் குறித்து தன்னார்வத் தொண்டு நிறுவனம் சமீபத்த... மேலும் பார்க்க

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க