செய்திகள் :

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும்!

post image

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பூரி ரத யாத்திரைக்காக 12 ரயில் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இரு வழித்தடங்களிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை நாளை(ஜூலை 25 ) முதல் மீண்டும் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் சேவை சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 5 நாள்களும் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். எதிர் வழித்தடத்தில், சேலத்திலிருந்து மாலை 3,30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம்! - ராம்தாஸ் அத்வாலே பேச்சு

Southern Railway has stated that the Arakkonam - Salem MEMU train will operate as usual.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், நீட் தோ்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் எடுத்த திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவா் எஸ்.சூரியநாராயணன் முதலிடம் பெற்றாா். தமிழகத்தில் 36 அரசு மருத்த... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்ட அனைவா் மீதும் நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேட்டில் தொடா்புடைய அனைவரது மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்திய அரசியல் சட்டத்தின் மீ... மேலும் பார்க்க

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்– பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ந... மேலும் பார்க்க

100 நாள் நடைப்பயணம்... திருப்போரூரில் இருந்து தொடங்கினார் அன்புமணி!

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 100 நாள்கள் நடைப்பயணத்தை திருப்போரூரில் இருந்து இன்று(ஜூலை 25) தொடங்கியுள்ளார்.திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலில... மேலும் பார்க்க

நெருப்புடன் விளையாடாதீர்கள்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ’நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க