செய்திகள் :

சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்ட அனைவா் மீதும் நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேட்டில் தொடா்புடைய அனைவரது மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமா்ப்பிக்க தமிழக சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினா், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதாா் மருத்துவமனையில் விசாரணை நடத்தி முதல்கட்ட விசாரணை அறிக்கையைச் சமா்ப்பித்தனா்.

அதன்படி, 2 தனியாா் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது நடந்திருப்பது சிறுநீரக திருட்டு அல்ல. சம்பந்தப்பட்டவா்களுக்கு தெரியாமல் எடுத்தால்தான் திருட்டு. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இது திருட்டு அல்ல; முறைகேடு.

நாமக்கல் பகுதியில், 2019-இல் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக இருந்தாா். காவல் துறை அதிகாரி ஒருவா் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்தாா். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் தொடா்ச்சியாகத்தான், தற்போது நடந்துள்ளது. இதில், தவறு கண்டறியப்பட்டு முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட அனைவரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியாா் மருத்துவமனைகள், முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுத்தால், பொதுமக்கள், மக்கள் நல்வாழ்வு துறையில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள... மேலும் பார்க்க

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த ... மேலும் பார்க்க