செய்திகள் :

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

post image

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு வசதியாக, திருமலை அன்னமய்ய பவனுக்கு எதிரே புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையத்தை செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் திறந்து வைத்தனா்.

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் பெறுவதற்கு, பக்தர்கள் அதிகாலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்த வருவதாக, நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னை, இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இனி இருக்காது. ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த மையத்தில், பக்தர்கள் விரைவாகவும் எளிதாகவும் டிக்கெட் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவாணி தரிசனம் யாருக்கு?

திருப்பதி திருமலை கோயிலில், பராமரிப்பு, உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீவாணி அறக்கட்டளையானது, திருமலை ஏழுமலையான் பக்தர்கள் பலரும் அளிக்கும் நன்கொடை மூலமாகவே செயல்பட்டு வருகிறது.

எனவே, தன்னுடைய செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருக்கும், நன்கொடை அளிக்கும் பக்தர்களை கௌரவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதே ஸ்ரீவாணி தரிசனம். அந்த வகையில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் நன்கொடை அளிக்கும் பக்தர்கள், சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதுதான் ஸ்ரீவாணி தரிசனம்.

இந்த ஸ்ரீவாணி தரிசன முறையில், நாள்தோறும் சரியாக 1000 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதனை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக மையங்களுக்கு வந்தும் பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்டமாக, திருமலை மற்றும் ரேணிகுண்டா விமான நிலையங்களில் தலா ஒரு டிக்கெட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், திருமலை திருப்பதி கோயிலில், தற்போது ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விநியோக மையம் திறக்கப்பட்டுள்ளது. இது, ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் பணியை துரிதப்படுத்தும் என்பதால் நன்கொடை வழங்கும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துல்லியத் தாக்குதல் நடத்த உதவும் ரேடாா்கள் கொள்முதல்: ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்

இலக்குகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்த தகவல்களை பரிமாற்றம் செய்யும் வான் பாதுகாப்பு ரேடாா்களை கொள்முதல் செய்வதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையி... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமான... மேலும் பார்க்க

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த 4 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினரின் முகாம் அருகி... மேலும் பார்க்க

ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு

ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த ஒரு வயது குழந்தையின் உடலை அவரது தந்தை லலித் ஆழ்துளை க... மேலும் பார்க்க