செய்திகள் :

தேர்தல் ஆணைய மோசடியை கையும் களவுமாகப் பிடித்துள்ளோம்.. தப்பிக்க முடியாது: ராகுல்

post image

கர்நாடகத்தில் தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்ததற்கான 100 சதவீதம் ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் ஜூலை 21 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. இதனிடையே கர்நாடகத்தில் தேர்தல் மோசடி நடைபெற்றதற்கு 100 சதவித ஆதாரம் தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது,

தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையமாகச் செயல்படவில்லை, அதன் வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்துள்ளது. 90 சதவிகிதம் அல்ல, 100 சதவிகிதம் உறுதியான ஆதாரம் தனது கட்சியிடம் உள்ளது.

தேர்தல் மோசடி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட நாடகம். தேர்தல் ஆணையத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இந்த மோசடியிலிருந்து தப்பிக்க விரும்பினால் அது நிச்சயம் நடக்காது. காங்கிரஸ் கட்சி அதைப் பார்த்துக்கொண்டு இருக்காது.

இந்தியாவில் வாக்குகள் திருடப்படுவதாகவும், கர்நாடகத்தில் வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெற்றது என்பதைத் தனது கட்சி கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.

பிகாரில் நடந்துவரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டபோது, தேர்தல் அதிகாரிகள் இதுவரை 52 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் முகவரிகளில் இல்லை என்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து ராகுல் இந்த கருத்துளை வெளியிட்டுள்ளார்.

பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிகாரில் வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது கட்சி போராடி வருவதாகவும் அவர் கூறினார்.

Congress leader Rahul Gandhi on Thursday said his party has "concrete 100 per cent proof" of the the Election Commission allowed cheating in a constituency in Karnataka

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையி... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமான... மேலும் பார்க்க

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த 4 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினரின் முகாம் அருகி... மேலும் பார்க்க

ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு

ஜெய்ப்பூரில் தந்தையால் ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த ஒரு வயது குழந்தையின் உடலை அவரது தந்தை லலித் ஆழ்துளை க... மேலும் பார்க்க

வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை: 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பறிமுதல்

புவனேஸ்வரம்: ஒடிசா மாநில வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து தங்க நாணயங்களும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 1.50 கோடி ரொக்கப் பணம் எண்ணப்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க