செய்திகள் :

செல்போன் பழக்கத்திலிருந்து விடுபட டிப்ஸ்! உண்மை கசக்கத்தான் செய்யும்!!

post image

புகைப்பழக்கத்தைவிடவும், செல்போன் பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு கடினமாம், முடியாமல் போகும் வாய்ப்பு அதிகமாம், சாத்தியமாவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது அறிவியல் ஆராய்ச்சிகள்.

ஒருநாளைக்கு சராசரிசயாக ஒருவர் சுமார் 5 மணி நேரம் செல்போனில் செலவிடுவதாகவும், சாதாரண நபர் ஒருவர் 58 முறை செல்போனில் தங்களுக்கு ஏதேனும் தகவல் வந்திருக்கிறதா என்று பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறையில் நான்குபேர் இருந்தால், அரட்டை சப்தம் கேட்கும், ஆனால், இப்போதோ, நான்கு பேரும் அவரவர் செல்போனில் மூழ்கிப்போகிறார்கள்.

பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால், செய்திகள் படிக்கிறோம், வேலை விஷியமாகத்தானே பார்க்கிறோம், சமூகத்தில் என்ன நடக்கிறது என்றுதானே தெரிந்து கொள்கிறோம் என்று சமாதானம் செய்துகொண்டாலும் உண்மை அதுவல்ல. பெரும்பாலான மனிதர்கள் செல்போன் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதுதான். உண்மை கசக்கத்தான் செய்யும்.

ஒருவேளை, இதில் நம்பிக்கை வரவில்லை என்றால் சுயமாக நாமே சோதனை செய்தும் பார்த்துக் கொள்ளலாம். ஆம் என்றுதான் வரும். இது இங்கு, அங்கு என்றில்லாமல், உலக நாடுகள் முழுமைக்கும், அனைத்து வயதினருக்குமானதாகவே உள்ளது.

வழக்கத்தை விட அதிகமாக செல்போன் பார்க்கும்போது, அது அன்றாட வாழ்க்கையை பாதித்துவிடுகிறது. பலருக்கும் இது மனநலப் பிரச்னையை உருவாக்கிவிடுகிறது. சிலர் மன உளைச்சல், மன அழுத்தத்துக்கு ஆளாவதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

இது மட்டுமல்லாமல், விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு நோய்களையும் வாங்கிக்கொடுத்து விடுகிறது. தூக்கமின்மை, கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், நினைவுத்திறன் குறைவது, கவனக்குறைவு போன்றவையும் நேரிடுகிறது.

செல்போன் பழக்கத்திலிருந்து தப்பிக்க, முதலில், இதையெல்லாம் முயற்சித்துப் பார்க்கலாம்.

  • அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதள செயலிகளை செல்போனின் முகப்புப் பக்கத்திலிருந்து நீக்கிவிடலாம்.

  • ஒவ்வொரு சமூக வலைதள செயலிகளுக்கும் பெரிய பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ளலாம்.

  • ஒருசில செயலிகளைப் பயன்படுத்தும் அதிகபட்ச நேரத்தை நியமிக்கும் வசதி உள்ளது. அதனைப் பயன்படுத்தலாம்.

  • ஸ்பேஸ், ஃபாரஸ்ட், பிளிப்டு, ஸ்க்ரீன் டைம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி, செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முயலலாம்.

  • தூங்க வரும்போது, உங்கள் செல்போனை வேறொரு அறையில் அல்லது படுக்கை அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்.

இதையெல்லாம் முயற்சித்துப் பார்த்துவிட்டு, முடியாமல் போனால், செல்போன் பயன்பாடு உங்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் மோசமடையச் செய்கிறது என்பதை உணர்ந்தால் நிச்சயம் மருத்துவர்களின் ஆலோசனைப் பெறலாம்.

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரையில் விபத்து: பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள அமர்நாத் புனித தலத்துக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற ஒரு பேருந்து இன்று(ஜூலை 22) பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து பக்தர்கள் காயமடைந்தனர். அதனைத்தொடர்... மேலும் பார்க்க